states

மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதற்காக ஜம்மு- காஷ்மீரில் ஊரடங்கு

5 மக்களவை தொகுதிகளை  கொண்ட ஜம்மு- காஷ்மீரில் 5 கட்ட மாக தேர்தல் நடைபெற்று வரு கிறது. 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்பு ஜம்மு- காஷ்மீ ரில் முதன்முறையாக தேர்தல் நடை பெற்று வரும் சூழ்நிலையில், அங்கு இதுவரை 2 மக்களவை தொகுதிக ளுக்கு (உதம்பூர், ஜம்மு) வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில், திங்களன்று நடை பெறும் நான்காம் கட்ட தேர்தலில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சனி யன்று மாலை ஓய்ந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் தோல்வி பயத் தால் இஸ்லாமியர்களை வாக்க ளிக்காமல் அம்மாநில பாஜக அரசு தாக்குதல் நடத்தியதை போன்று ஜம்மு - காஷ்மீரிலும் மக்களை வாக்க ளிக்க விடாமல் அராஜகத்தை தொடங்கியுள்ளது மோடி அரசு. 

ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட புல்வாமா உள்ளிட்ட சில மாவட்டங்களில், அதாவது முஸ்லிம் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் சனியன்று மாலை 6:30 மணி முதல் தேர்தல் முடியும் வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள யூனி யன் பிரதேச நிர்வாகம். 

தோல்வி பயத்தால் வாக்களிக்க விடாமல் மக்களை முடக்கும் மோடி அரசு
மோடி அரசின் இந்த இழிவான நட வடிக்கைக்கு “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன. இந்த அராஜகம் தொ டர்பாக ஜம்மு - காஷ்மீரின் முக்கிய கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி யின் தலைவர் மெஹபூபா முப்தி கூறு கையில்,”திங்களன்று தேர்தல் நடை பெறும் ஸ்ரீநகர் மக்களவை தொகுதி யின் புல்வாமா உள்ளிட்ட சில மாவட்டங்களில் சனியன்று மாலை 6:30 மணி முதல் தேர்தல் முடியும் வரை  யூனியன் பிரதேச நிர்வாகத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. தேர்தலில் மக்களை வாக்க ளிக்க விடாமல் முடக்குவதற்காகவே இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. தோல்வி பயத்தால் மோசடி செய்ய ஆயத்தங்கள் நடை பெற்று வருகின்றன. ஏற்கெனவே 2ஆம் கட்டத் தேர்தலில் நடைபெற்ற வாக்குப்பதிவு ஜம்மு தொகுதியின் பூஞ்ச் மாவட்டத்தில் மக்களை வாக்க ளிக்க விடாமல் அடைத்து வைத்தி ருந்தனர். இதே போல ஸ்ரீநகர் மக்க ளவை தொகுதியிலும் தேர்தல் மோசடிகளை அரங்கேற்ற ஏற்பாடு கள் தீவிரமாக நடைபெற்று வரு கின்றன” என அவர் குற்றம் சாட்டி யுள்ளார்.